Skip to main content

திருப்புகழ் 449 கனகசபை மேவும் (சிதம்பரம்) Arunagiri Nathar




தனதனன தான தனதனன தான தனதனன தானத் தனதானா

கனகசபை மேவும் எனதுகுரு நாத கருணைமுருகேசப் பெருமாள்காண்

கனகநிற வேதன் அபயமிட மோது கரகமல சோதிப் - பெருமாள்காண்

வினவுமடியாரை மருவிவிளையாடு விரகு ரச மோகப் பெருமாள்காண்

விதி முநிவர் தேவர் அருணகிரி நாதர் விமல சர சோதிப் பெருமாள்காண்

சனகிமணவாளன் மருகனென வேத சதமகிழ்குமாரப் - பெருமாள்காண்

சரணசிவ காமி இரணகுல காரி தருமுருக நாமப் - பெருமாள்காண்

இனிதுவன மேவும் அமிர்தகுற மாதொடு இயல்பரவு காதற் - பெருமாள்காண்

இணையில் இப தோகை மதியின்மகளோடு இயல்புலியுர் வாழ்பொற் பெருமாளே.

Comments

Popular posts from this blog

Tiruvannamalai kubera lingam

தினமும் 6 முறை படியுங்கள் . உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

தொந்தி சரிய திருப்புகழ் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் Thonthi sariya thirupugazha arunagiri nathar

தந்த தனன தனனா தனனதன தந்த தனன தனனா தனனதன தந்த தனன தனனா தனனதன தனதான தொந்தி சரிய மயிரே வெளிறநிரை தந்த மசைய முதுகே வளையஇதழ் தொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே குழறவிழி துஞ்சு குருடு படவே செவிடுபடு ...... செவியாகி வந்த பிணியு மதிலே மிடையுமொரு பண்டி தனுமெ யுறுவே தனையுமிள மைந்த ருடைமை கடனே தெனமுடுக ... துயர்மேவி மங்கை யழுது விழவே யமபடர்கள் நின்று சருவ மலமே யொழுகவுயிர் மங்கு பொழுது கடிதே மயிலின்மிசை ...... வரவேணும் எந்தை வருக ரகுநா யகவருக மைந்த வருக மகனே யினிவருக என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம இங்கு வருக அரசே வருகமுலை யுண்க வருக மலர்சூ டிடவருக என்று பரிவி னொடுகோ சலைபுகல சிந்தை மகிழு மருகா குறவரிள வஞ்சி மருவு மழகா அமரர்சிறை சிந்த அசுரர் கிளைவே ரொடுமடிய ... அடுதீரா திங்க ளரவு நதிசூ டியபரமர் தந்த குமர அலையே கரைபொருத செந்தி னகரி லினிதே மருவிவளர் ...... பெருமாளே. வருமாயன்

நினைத்தாலே முக்தி தரும் திரு அண்ணாமலை கோவில் திருவண்ணாமலை