Skip to main content

தொந்தி சரிய திருப்புகழ் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் Thonthi sariya thirupugazha arunagiri nathar




தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன
தந்த தனன தனனா தனனதன தனதான

தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
தந்த மசைய முதுகே வளையஇதழ்
தொங்க வொருகை தடிமேல் வரமகளிர்

நகையாடி தொண்டு கிழவ னிவனா
ரெனஇருமல் கிண்கி ணெனமு னுரையே
குழறவிழி துஞ்சு குருடு படவே
செவிடுபடு ...... செவியாகி

வந்த பிணியு மதிலே மிடையுமொரு
பண்டி தனுமெ யுறுவே தனையுமிள
மைந்த ருடைமை கடனே தெனமுடுக
... துயர்மேவி மங்கை யழுது விழவே
யமபடர்கள் நின்று சருவ மலமே
யொழுகவுயிர் மங்கு பொழுது கடிதே
மயிலின்மிசை ...... வரவேணும்

எந்தை வருக ரகுநா யகவருக
மைந்த வருக மகனே யினிவருக
என்கண் வருக எனதா ருயிர்வருக
...... அபிராம இங்கு வருக

அரசே வருகமுலை யுண்க வருக
மலர்சூ டிடவருக என்று பரிவி
னொடுகோ சலைபுகல சிந்தை மகிழு
மருகா குறவரிள வஞ்சி மருவு
மழகா அமரர்சிறை சிந்த அசுரர்
கிளைவே ரொடுமடிய ... அடுதீரா

திங்க ளரவு நதிசூ டியபரமர்
தந்த குமர அலையே கரைபொருத
செந்தி னகரி லினிதே மருவிவளர்
...... பெருமாளே. வருமாயன்

Comments

Popular posts from this blog

Iob sawcarepet